Saturday, December 12, 2009

Kaadhal venpaakkal

பார்ப்பவை யாவிலும் உன்முகம் காண்கிறேன்
கேட்பவை யாவுமே உன்குரல் ஆகுதே
புலன்கள் நிறைத்தாய் உயிரில் கலந்திட்டாய்
காதலில் நோகுதே உள்ளம்...


 என் பேர் மறந்திட்டேன் ஏதும் அறிகிலேன்
உன்முகம் அல்லாது வேறொன்றும் பார்த்திலேன்
கண்ணிலே நிற்கிராய் கண்மணி நீயடி
என்னிலும் நேசித்தேன் உன்னை!


மொழியில்லை சொல்லில்லை ஓர்பொருளும் இல்லை
இருளில்லை காணவோர் ஒளியும்தான் இல்லை
பகலில்லை நித்திரைக் கோரிரவும் இல்லை
கண்ணே உனைக்கா ணாது.


(இவை மூன்றும் சில வருடங்கள் முன்பு   (காதல் என்றால் என்ன என்று அனுபவிப்பதற்கும் முன்பு!!) நான் வைத்திருந்த வேறோர் வலைத்தளத்தில் எழுதியவை. எனக்குத் தெரிந்த ஒரே 'formal' தமிழ்க் கவிதை வடிவம் வெண்பா மட்டுமே, அதையும் கொலை செய்திருக்கலாம், செய்திருப்பின் மன்னித்து சுட்டிக் காட்டவும்.)

No comments:

Post a Comment