Saturday, December 12, 2009

Kadavul venpaakkal

ஒளியெலாம் நின்றாலும் ஓரழிவு வந்தாலும்
பாழோர் நரகமே தான்சென்று விட்டாலும்
கேட்கட்டும் நம்செவி நாதனின் நாமம்
நமச்சிவாயஞ் சொல்லட்டும் நாவு!

காண்பவை உண்மையோ காட்சிதான் மாயமோ
காண்பவன் நானேயோ நானென்ப தாரோ
உலகுதான் என்கொலோ உண்மையென் பதுள்ளதோ
அறிகிலேன் நமச்சிவா யனே!

ஆசைகள் போக அகங்காரம் நீங்கிட
வாழ்வினில் என்றும் தெளிவே நிலைத்திட
இன்பதுன்பம் தந்திடும் பாடம் அறிந்திட
தேவியைப் போற்றுவோம் நாளும்!

ஆசையே அழியுமே வேண்டுதல் வேகுமே
மேகலை போகுமே மேனியும் சாகுமே
தானென்று நின்றதே மண்ணிலே போகுமே
காலனே வந்த நாளில். 


தெளிவாய் இருந்திடு தேடி மெய் கண்டு
பணிவாய் இருந்திடு பேரொளி கண்டிடு
அன்புதான் கொண்டிரு ஆசையை நீக்கிடு
ஆனந்தம் தருமந்த வாழ்வு!

No comments:

Post a Comment