Monday, April 13, 2009

நிறமறியேன்...

செவ்வானத்தின் வண்ணம் கேட்டனர் என்னிடம்
சொல்லத் தெரியாது திகைத்து நின்றேன்...
நீலக்கடலின் நிறம் கூட இன்று
நினைவில் வர மறுத்ததடி கண்ணே!
பச்சைப் புற்களைப் பார்த்த பொழுதும்,
இச்சைக் காதலியே, இருட்டையே கண்டேன்...
என்னவள் நீ அருகில் இல்லாமல்
வண்ணங்கள் எனக்கு ஏதடி கண்மணி?

No comments:

Post a Comment